×

அவங்களுக்கு பிரதமர் வேட்பாளர்ன்னு யாரும் இல்ல.. நாடாளுமன்றத்தின் வெளியில உட்கார்ந்து டீ சாப்பிட போறாங்களா? அதிமுகவை சீண்டிய அண்ணாமலை

கோவை விமான நிலையத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ சார்பில் போட்டியிடும் 195 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஒரு மாநில தலைவராக எனக்கு பல்வேறு கடமைகள் இருக்கிறது. தேசிய தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு நான் கட்டுப்படுவேன். மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட் பாஜ வளர்ச்சியை காட்டும். கொங்கு மண்டலத்தில் முதன்மையான கட்சியாக பாஜ உள்ளது.

கோவையில் சரித்தர வெற்றியை பாஜ பெறப்போகிறது என்பதை எழுதி கொடுக்கிறேன். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு என கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜ கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார். அண்ணாமலையிடம் நிருபர்கள் எஸ்.பி. வேலுமணி கொங்கு மண்டலத்தில் பாஜவுக்கு வரும் ஓட்டுகள் செல்லாத ஓட்டாக மாறும் எனவும் தெரிவித்து வருகிறாரே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணமாலை, ‘‘நீங்க வேண்டுமானல் பாருங்க எழுதி கொடுக்கிறேன் கோவையில் பாஜவில் சரித்தர வெற்றி பெற போகிறது. எல்லாம் மாறிவிட்டது.

கடந்த காலம் பற்றி பேசி வருகின்றனர். இது எல்லாம் பொய் பேச்சு. இப்படி பேசும் அவர்களின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று சொல்ல சொல்லுங்க. எம்.பி. ஆன பிறகு அவர்கள் நாடாளுமன்றத்தின் வெளியில் உட்கார்ந்து டீ சாப்பிட போறாங்களா? கோவை மக்களின் பிரச்னையை யாரிடம் கொடுப்பீர்கள்?. நாடாளுமன்ற டீ கடையில் உட்கார்ந்து மனுவை பார்த்து கொண்டு இருப்பீங்களா?’’ என கேள்வி எழுப்பினார்.

The post அவங்களுக்கு பிரதமர் வேட்பாளர்ன்னு யாரும் இல்ல.. நாடாளுமன்றத்தின் வெளியில உட்கார்ந்து டீ சாப்பிட போறாங்களா? அதிமுகவை சீண்டிய அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Annamalai ,Coimbatore airport ,BJP ,State ,President ,
× RELATED அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய...